தமிழகம் முழுவதும் 81 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர்கள் என மொத்தம் 81 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர்கள் என மொத்தம் 81 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: மதுரை தெற்கு மண்டல குற்றப் புலனாய்வுப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.கலைச்செல்வன், சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராகவும்,
 அப்பொறுப்பிலிருந்த ஆர். சுசில்குமார், சென்னை சென்ட்ரல் இருப்புப் பாதை காவல் துணை காவல் கண்காணிப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
 சென்னை சென்ட்ரல் இருப்புப் பாதை காவல் துணை காவல் கண்காணிப்பாளராக உள்ள வி.குணசேகரன், சென்னை அண்ணாநகர் சரக உதவி ஆணையராகவும், அப்பொறுப்பிலிருந்த கே.சந்திரசேகரன், சென்னை போக்குவரத்து விசாரணைப் பிரிவு (மேற்கு) உதவி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 கிண்டி சரக உதவி ஆணையராக உள்ள ஆர்.சுப்பிரமணி, திருச்சி இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளராகவும், மதுரை நகர சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக உள்ள கே.முத்துக்குமார், சென்னை பெருநகர நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
 விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் டி.ஈஸ்வரன் தாம்பரம் சரக உதவி ஆணையராகவும், அந்த பொறுப்பிலுள்ள டி.லோகநாதன் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையராகவும், அந்த பொறுப்பிலுள்ள கே.பி.எஸ்.தேவராஜ் பல்லாவரம் சரக உதவி ஆணையராகவும், அந்த பொறுப்பில் இருந்த ஆர்.விமலன் வேப்பேரி சரக உதவி ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
 வேப்பேரி சரக உதவி ஆணையராக உள்ள வி.வினோத் சாந்தாராம் ராயப்பேட்டை சரக உதவி ஆணையராகவும், அந்த பொறுப்பிலுள்ள வி.கவிக்குமார் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராகவும், அந்த பொறுப்பிலுள்ள எஸ்.முத்துக்குமார் சென்னை நகர சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 சென்னை நகர சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக உள்ள ஆர்.அழகேசன், சென்னை எம்.கே.பி. நகர் சரக உதவி ஆணையராகவும், அந்த பொறுப்பிலுள்ள ஈ.பி.அன்பழகன், திருநெல்வேலி இருப்புப்பாதை துணை காவல் கண்காணிப்பாளராகவும், கன்னியாகுமரி மாவட்ட அமலாக்கப்பிரிவு துணை காவல் காணிப்பாளராக உள்ள ஜி.குமார் நுங்கம்பாக்கம் சரக உதவி ஆணையராகவும், அந்த பொறுப்பிலுள்ள சி.தொல்காப்பியன், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையராகவும், அந்த பொறுப்பிலுள்ள பி.அசோகன், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும், அந்த பொறுப்பிலுள்ள ஏ.தேவேநேசன், திருச்சி நகர சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 காஞ்சிபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக உள்ள வி.பொன்ராமு, சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உதவி ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள் என மொத்தம் 81 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com