கோவையில் அதிகாரிகளுடனான ஆய்வினைத் தொடர்ந்து அமைச்சர்களுடன் ஆளுநர் ஆய்வு? முற்றுகை, பதற்றம்! 

கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்கியுள்ள விருந்தினர் மாளிகையினை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயன்றதால்... 
கோவையில் அதிகாரிகளுடனான ஆய்வினைத் தொடர்ந்து அமைச்சர்களுடன் ஆளுநர் ஆய்வு? முற்றுகை, பதற்றம்! 

கோவை: கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்கியுள்ள விருந்தினர் மாளிகையினை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அரசின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்தார். முதலில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனையில் ஈடுப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களுடன் அவர் ஆய்வுக் கூட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் ஆளுநர் அதிகார வரம்பினை மீறி செயல்படுவதாகக் கூறி, அவர் தங்கியுள்ள விருந்தினர் மாளிகையினை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 

இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.  முன்னதாக ஆளுநரின் திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிகாரத்துக்கு உட்பட்டு தான் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது ஆளுநருக்கு தெரியும். ஆளுநர் ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லை என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com