பதினெண் சித்தர்களில் ஒருவரான திருமூலர் குறித்து கவிஞர் வைரமுத்து சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ.14) கட்டுரைஆற்றுகிறார்.
"தினமணி' ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி சென்னை பாரிமுனை எஸ்பிளனேட் சாலையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் "கருமூலம் கண்ட திருமூலர்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து தனது கட்டுரையை அரங்கேற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமை வகிக்கிறார். இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.