முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
வேலூர் மத்திய சிறையில் சுமார் 26 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று, மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மத்திய சிறையில் இருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் உரிய பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டார்.