ஆளுநர் தலையீடு நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகளை மட்டும் நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
தமிழகத்தில் இதுவரை பதவி வகித்த எந்த ஆளுநரும் அரசு அதிகாரிகளை நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதில்லை. இந்த நிலையில், கோவையில் அரசு அதிகாரிகளை அழைத்து மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆய்வில் ஈடுபட்டது தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் ஆளுநர் தலையிடும் நோய் என்பது தமிழகத்துக்கும் பரவியுள்ளது. மாநில அரசை கட்டுப்படுத்த ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது. இது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.