திமுக ஆட்சியின் போதுதான் மாநிலத்தின் உரிமை பறிக்கப்பட்டது: அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுக ஆட்சியின் போதுதான் மாநிலத்தின் உரிமை பறிக்கப்பட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியின் போதுதான் மாநிலத்தின் உரிமை பறிக்கப்பட்டது: அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுக ஆட்சியின் போதுதான் மாநிலத்தின் உரிமை பறிக்கப்பட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாநில சுயாட்சி உரிமையை இழக்காமல் தமிழக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. திமுக ஆட்சியின் போதுதான் மாநிலத்தின் உரிமை பறிக்கப்பட்டது. பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் அழுகிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதில்லை. விலையை குறைக்க வெங்காயத்தின் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகளை மட்டும் நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

தமிழகத்தில் இதுவரை பதவி வகித்த எந்த ஆளுநரும் அரசு அதிகாரிகளை நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதில்லை. இந்த நிலையில், கோவையில் அரசு அதிகாரிகளை அழைத்து மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆய்வில் ஈடுபட்டது தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com