சென்னை: தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் தாக்குதல் நடத்தவில்லை. தமிழக மீனவர்கள் காண்பித்த ரப்பர் தோட்டாக்கள் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமானது அல்ல. எனவே தாக்குதல் நடத்தியது இந்தியக் கடலோரக் காவல்படைதான் என்று கூற வேண்டாம். விசாரணைக்குப் பிறகே எல்லாம் தெரியும் என்றார்.
மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், மீனவர்கள் கூறியது உண்மையாகவும் இருக்கலாம். தீவிரமாக விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியும் என்று கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்துத் துறையிலும் தனியார் பங்களிப்பு தேவை என்பதாலேயே பாதுகாப்புத் துறையில் விதிகள் தளர்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.