அகில இந்திய வானொலி இசைப் போட்டி: முடிவுகள் வெளியீடு

அகில இந்திய வானொலி நடத்திய 2017 -ஆம் ஆண்டுக்கான இசைப் போட்டிகளுக்கான இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

அகில இந்திய வானொலி நடத்திய 2017 -ஆம் ஆண்டுக்கான இசைப் போட்டிகளுக்கான இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில், அகில இந்திய வானொலி ஆண்டுதோறும் தேசிய அளவிலான இசைப் போட்டிகளை நடத்தி வருகிறது. 2017 -ஆம் ஆண்டுக்கான இசைப் போட்டிகளில் சென்னை வானொலி நிலையத்திலிருந்து பங்கேற்று வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:
வாய்ப்பாட்டு: முதல் பரிசு - அபிஷேக் ரவி சங்கர், இரண்டாம் பரிசு - ஆர்.பி.சரவணன்.
பக்திப் பாடல்கள்: முதல் பரிசு - ஆர்.பி.சரவணன், இரண்டாம் பரிசு - என்.ஜனனி ஹம்சினி .
தந்தி வாத்தியங்கள் பிரிவு: வயலினில் இரண்டாம் பரிசு - பி.கார்த்திக். வீணையில் முதல் பரிசு - எஸ். அஞ்சலி, இரண்டாம் பரிசு -ஆர்.மாது.
தாள வாத்தியங்கள் பிரிவு: மிருதங்கத்தில் முதல் பரிசு - எல். சுதர்சன் ஸ்ரீனிவாஸ், தவிலில் இரண்டாம் பரிசு -ஆர்.மகேஷ், நாதஸ்வரத்தில் இரண்டாம் பரிசு - எஸ். சேதுராமன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com