தமிழில் படித்தோருக்கு 20% முன்னுரிமையை பின்பற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கும் அரசாணையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழில் படித்தோருக்கு 20% முன்னுரிமையை பின்பற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கும் அரசாணையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

தான் அரசு பாலிடெக்னிக் விரைவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த நிலையில், முதுநிலை வரை தமிழில் படித்த தன்னை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவில்லை என்றும், எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரியும் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு 2010ல் வெளியான அரசாணையை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, மனுதாரர் செந்தில்குமாரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com