திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 துப்புரவு பணியாளர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் சாலையில் இன்று இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் துப்புரவு பணியாளர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திண்டுக்கல்லில் மேலும் இரண்டு இடங்களில் 2 துப்புரவு பணியாளர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 3 துப்புரவு பணியாளர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.