காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அடுத்த 3 நாள்களுக்கு மிதமான மழை

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும். 
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அடுத்த 3 நாள்களுக்கு மிதமான மழை

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும். 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் கூறியது:
வடகிழக்குப் பருவமழை கடந்த 7-ஆம் தேதி முதல் இரு வாரமாக வலுக்குறைந்திருந்தது. பருவமழை தற்போது வலுப்பெறுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதனுடன் தொடர்புடைய பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 3 நாள்களில் வலுப்பெற்று மேற்கு திசையில் நகரும். இதன்காரணமாக சனிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.
தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.26) முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 3 நாள்களுக்கு வானம் மேகமூட்டமாகக் காணப்படும். ஓரிருமுறை நகரப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 
அக். 1-ஆம் தேதி முதல் இப்போது வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 260 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலத்தில் இயல்பாக பெய்யும் மழை அளவு 330 மி.மீ. இது இயல்பை விட 19 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com