மாணவிகளைக் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை இடைநீக்கம்

திருவள்ளூரில் பள்ளியின் கழிப்பறையை மாணவிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மணிமேகலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூரில் பள்ளியின் கழிப்பறையை மாணவிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மணிமேகலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பயன்படுத்த 10 கழிப்பறைகள் உள்ளன. 
பள்ளித்தலைமை ஆசிரியை, மணிமேகலை அவ்வப்போது மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தாராம். கடந்த வெள்ளிக்கிழமையும் (நவம்பர் 24) மாணவிகளை வெறும் கையால், கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார். 
இதையடுத்து மாணவிகள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, கைகளால் கழிப்பறையைச் சுத்தம் செய்தனர். இது குறித்து பள்ளியில் விரிவான விசாரணை நடத்துமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டார். 
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பள்ளியில் விசாரணை நடத்தினர். கழிப்பறையைச் சுத்தம் செய்த மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தி, அதை கடிதமாக எழுதி பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலையை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com