வீட்டு சமையல் எரிவாயு விலை ரூ.47.50 உயர்வு

சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ.47.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ.47.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளை விலை கடந்த சனிக்கிழமை (செப்.30) ரூ.609-ஆக இருந்தது; இதன் விலை ஞாயிற்றுக்கிழமை (அக்.1) முதல் ரூ.656.50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரே நாளில் ரூ.47.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமை (அக்.1) முதல் பதிவு செய்தோருக்கு ரூ.656.50-க்கு சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிக் கணக்கில் எவ்வளவு? மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.476.78-லிருந்து ரூ.479.11-ஆக திங்கள்கிழமை (அக்.1) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது; அதாவது ரூ.2.33 அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு சமையல் எரிவாயு உருளையை ஞாயிற்றுக்கிழமை (அக்.1) முதல் பதிவு செய்து, மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையைப் பெறும் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் ரூ.177.39 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com