எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதா? விளக்கமளிக்க மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது குறித்து தலைமை செயலாளர் விளக்கமளிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதா? விளக்கமளிக்க மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது குறித்து தலைமை செயலாளர் விளக்கமளிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
கேள்வி: அதிமுக அரசு மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாவது அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடாதா?

பதில்: நீதிமன்றத்தில் உள்ள பிரச்னைகள் தாமதமா அல்லது விரைவா என்பது பற்றி நாம் பேச முடியாது. வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. பார்க்கலாம்.

கேள்வி: கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

பதில்: மீடியாக்கள் இந்தச் செய்தியை ஒப்புக்கொண்டு முதலில் ஒளிபரப்புங்கள். ஏற்கனவே உயர் நீதிமன்றமே, பள்ளி கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி இந்த விழாவிற்கு அழைத்துச் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. அதையும் மீறி பள்ளி மாணவர்களை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் இந்த அரசு அழைத்துச் செல்கிறது. அரசு விழா என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவும், அவர்களின் கட்சிப் பிரச்னைகளை பேசவும், லம்பாடி அரசியலை பேசவும் அந்த விழாக்களை பயன்படுத்துகிறார்கள். அந்த விழாவிற்கு 100 நாள் வேலை செய்யும் தாய்மார்களை கட்டாயப்படுத்தி அவர்களுக்கு முழுநாள் விடுமுறை அளித்து ஒவ்வொரு ஊராட்சியிலும் அவர்களை வேன் வைத்து அழைத்துச் செல்லும் காட்சியெல்லாம் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அதையெல்லாம் ஊடகங்கள் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அதுமட்டுல்லாமல் நான் கேள்விபட்டது, இன்றைக்கு கரூரில் எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை விட சொல்லியிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளின் வாகனங்களையும் பயன்படுத்துகிறார்கள். இந்த அரசு விழாவை நடத்த அழைப்பது யாரென்று கேட்டால், தலைமைச் செயலாளர். இன்றைக்கு அவர் பதில் சொல்ல இயலவில்லை என்றாலும், நாளைக்கு எந்த இடத்தில் இருந்தாலும் இதற்கு பதில் சொல்லி விளக்கமளித்தாக வேண்டும். அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்லக்கூட தயாராக இருக்கின்றோம்.

கேள்வி: அரசு சார்பில் டெங்கு ஒழிக்க 16 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால், தினமும் மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டே இருக்கிறார்கள். இதுபற்றி?

பதில்: பணம் ஒதுக்குகிறார்கள், ஆனால் இந்தப் பணம் எங்கே போகிறது. நேற்றுகூட வேதனையோடு சொன்னேன். ஏற்கனவே குட்கா விற்பதற்கே மாமூல் வாங்கியவர்கள், இப்பொழுது டெங்கு பரவுவதற்கு மாமூல் வாங்குகிறார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் இருக்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com