நரிக்குடி அருகே டெங்கு காய்ச்சலால் காவலர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
நரிக்குடி அருகே உலக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் தங்கச்சாமி(29). மணிமுத்தாறு சிறப்புக் காவல்படைப் பிரிவில் பணியாற்றினார். கடந்த 15-ஆம் தேதி அவருக்கு அனுசுயா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்த தங்கச்சாமிக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது அவருக்கு டெங்கு பாதிப்புடன் மூளைக் காய்ச்சலும் இருந்ததாம்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கச்சாமி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். திருமணமான 15 நாள்களில் காவலர் உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.