தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்த் திரைப்பட த் தயாரிப்பாளர் சங்கம் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்தி: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில், மூத்த மற்றும் முன்னணி திரைப்பட , நாடக நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி நடிகர், நடிகைகளுக்கு பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வசதி அளிக்கும் விதமாக, நடிகர் சங்கத்தின் வேண்டுகோள் படி அன்றைய தினம் சினிமா படப் பிடிப்புகள் ரத்து செய்து, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.