காவல் உதவி ஆய்வாளராக திருநங்கை பணி நியமனம்: ஜி.கே.வாசன் வாழ்த்து 

தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நம் நாட்டின் காவல்துறையில் முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி காவல்துறை உதவி ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. ஆட்சியாளர்கள் பாலினத்தைக் காரணம் காட்டி யாரையும் ஒதுக்கிவிடக்கூடாது. திறமையும்,
தகுதியும் இருக்கும் அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டியது அரசின் கடமை. மூன்றாம் பாலினத்தவருக்கு பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவை மேம்பட உதவும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com