சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் செயல் இயக்குநராக பி.எஸ்.செகாவத் திங்கள்கிழமை(அக்.9) பொறுப்பேற்றார்.
விவசாய அறிவியலில் பட்டம் பெற்றுள்ள இவர், பெங்களூரு ஐஐஎம்மில் இந்திய வங்கித்துறை குறித்து முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். 1986-ஆம் ஆண்டு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் விவசாய நிதி அதிகாரியாக பொறுப்பேற்ற செகாவத், 31 ஆண்டுகளாக பல பொறுப்புகளை வகித்துள்ளார். ஜெய்ப்பூர், ராஞ்சி, புணே, தில்லி மண்டலங்களில் தலைமை அதிகாரியாகவும் வங்கியின் தலைமை அலுவலகத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.