அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படியை 1 சதவீதம் உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படியை 1 சதவீதம் உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணை:மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் 1 சதவீதம்
உயர்த்தி வழங்கிட முடிவெடுத்துள்ளது. அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி புதன்கிழமை அறிவிக்கப்பட்ட திருத்தப்பட்ட அடிப்படைச் சம்பள உயர்வு அடிப்படையில் 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com