ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது: விஜயகாந்த்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது: விஜயகாந்த்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பழங்கள், ரொட்டி ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்றும் ஆர்.கே. நகரில் இடைத்தேர்தலுக்கு முன்பே சட்டப்பேரவை தேர்தல் வர வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

விஜயகாந்த் நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com