புதுவையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: போலீசார் தடியடி, எம்எல்ஏ சட்டை கிழிப்பு, பதற்றம்

புதுவையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை பாதுகாக்க வலியுறுத்தி இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதில் எம்.எல்.ஏ. செல்வம் சட்டை கிழிக்கப்பட்டது். இதில் 15 பேர் காயமடைந்தனர்.

புதுவையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை பாதுகாக்க வலியுறுத்தி இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதில் எம்.எல்.ஏ. செல்வம் சட்டை கிழிக்கப்பட்டது். இதில் 15 பேர் காயமடைந்தனர்.

புதுவையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை பாதுகாக்க வலியுறுத்தி அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம், அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள சர்க்கரை ஆலை வளாகம் அருகே இன்று நடைபெற்றது. இதற்கு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் டிபிஆர்.செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 

கடந்த 2016-17-ல் கரும்பு அறவை பருவத்துக்கு வெட்டி அநுப்பிய கரும்புக்கு 7 மாதங்கள் ஆகியும் முன்பணத்தொகை ரூ.7.5 கோடியை தரவில்லை. அதை உடனே தர வேண்டும்.

நிகழாண்டு விவசாயிகளிடம் இருந்து பிடித்தம் செய்த கரும்புகடன் தொகை ரூ.3 கோடியை இதுவரை வங்கிக்கு செலுத்தவில்லை. அத்தொகையை அரசு உடனே வங்கிகளுக்கு செலுத்த வேண்டும்.

மேலும் 2015-16 ஆண்டுக்கு பிடித்தம் செய்த கரும்புக் கடன் தொகை ரூ.3.5 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்து அறிவித்தும் விவசாயிகளுக்கு திருப்பித் தரவில்லை. மேலும் 3 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.7 கோடி நிலுவையை வழங்க வேண்டும். கூட்டுறவு ஆலையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கு கடந்த மார்ச் முதல் செப்டம்பர் வரை 7 மாதங்கள் இபிஎப், எல்ஐசி பணிக்கொடை ரூ.27.5 கோடி செலுத்தப்படவில்லை.

பணியாளர்கள் வாழ்க்கை நிலை கருதி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

ஆலை பணியாளர்களுக்கு போனஸ், ஊக்கத்தொகை தர வேண்டும், ஆலை அறவையை உடனே துவக்க பருவகால பணியாளர்களை வரவழைத்து செப்பனிடும் பணிகளை தொடங்க வேண்டும், ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

அப்போது விவசாயிகள் கரும்புடன் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கோக்ஷமிட்டு ஆலையின் உள்ளே நுழைந்தனர்.

அவர்களை மறித்த போலீசார் உங்கள் போராட்டத்துக்கு அனுமதி இல்லை எனக்கூறி மறுத்தனர். ஏற்கெனவே அனுமதி தரப்பட்டுள்ளது என விவசாயிகள் கூறியபோது அது ரத்து செய்யப்பட்டு விட்டதாக போலீசார் கூறினர். அதையும் மீறி போராட்டக்காரர்கள் உள்ளே செல்ல முயன்றபோது தடியடி நடத்தினர். இதில் என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ டிபிஆர் செல்வம் சட்டை கிழிக்கப்பட்டது. ஆலையின் முன்னாள் தலைவர் ஞானசேகரன் உள்பட 15 பேர் காயமடைந்தனர். 

பின்னர் எம்எல்ஏ செல்வம் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றபோது பெண்கள் உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com