அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலில் மர்மக் காய்ச்சலால் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருமுல்லைவாயல் எஸ்.எம்.நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன். தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவரது தங்கை பிரியா (23)(படம்) கடந்த ஒருவாரமாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் பிரியாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால், ஆவடி அரசு பொது மருத்துவ
மனையில் சேர்த்தனர்.
ஆனால், அங்கு பிரியா வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.