தமிழ்நாடு
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 97.85 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 23,327 கன அடியிலிருந்து 15,667 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 16 ஆயிரம் கன அடியிலிருந்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் இருப்பு 62.89 டி.எம்.சி.யாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் மெல்ல சரியத் தொடங்கியது.