தமிழகத்தில் நடக்கும் ஆட்சி ஒழிந்தால் டெங்கு காய்ச்சல் ஒழியும் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்ளிடம் மேலும் கூறியதாவது, டெங்கு பாதிப்பு குறித்த உண்மையான தகவல்களை அரசு மூடி மறைக்கிறது. நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்கவுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.