தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத் தகவலில் மேலும் கூறியிருப்பதாவது,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது ஒடிசாவின் பூரி அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் 2 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.