பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், மருத்துவருமான எஸ்.பி. கிருபாநிதி இன்று காலை காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த எஸ்.பி. கிருபாநிதி(90) கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார். அவரது உடல் கடலூர் கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த எஸ்.பி. கிருபாநிதி 2000ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை பாஜகவின் தமிழக மாநிலத் தலைவராக பொறுப்புவகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.