பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருபாநிதி மறைவு: ராமதாஸ் இரங்கல்

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்  கிருபாநிதி மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருபாநிதி மறைவு: ராமதாஸ் இரங்கல்

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்  கிருபாநிதி மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், மருத்துவருமான எஸ்.பி. கிருபாநிதி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். 

மறைந்த மருத்துவர் கிருபாநிதி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். ஏராளமான நிகழ்ச்சிகளில் என்னுடன் அவர் கலந்து கொண்டிருக்கிறார். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி ஏழைகளுக்கு மருத்துவ சேவை வழங்கியவர். பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றியவர். 

கிருபாநிதி மிகவும் நல்ல மனிதர். மனிதர்களை நேசித்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பா.ம.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com