புதுச்சேரியில் 3 ரௌடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையத்தில் ரௌடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஜெரால்டு, சதீஷ் மற்றும் ஞானசேகர் ஆகியோர் வெட்டப்பட்டும் வெடிகுண்டு வீசியும் கொல்லப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட 3 ரௌடிகளில் 2 பேர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் சமீபகாலமாக பரவிவரும் வெடிகுண்டு கலாசாரத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.