திருவள்ளூர்: தமிழகத்தில் நடைபெற்றும் ஊழல் ஆட்சி நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான தங்க. தமிழ்செல்வன் கூறினார்.
திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால் அரசு நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றார்.
மேலும், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக அம்மா அணி சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என கூறினார்.