அனிதா தற்கொலை: ரஜினி இரங்கல்

அனிதா தற்கொலை: ரஜினி இரங்கல்

விபரீத முடிவை எடுக்கும் முன்பு அனிதா என்னவெல்லாம் நினைத்தாரோ?

மாணவி அனிதாவின் மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ட்விட்டரில் ரஜினி தெரிவித்ததாவது:

மாணவி அனிதாவின் முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அனிதாவின் மரணத்தால் என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது.

விபரீத முடிவை எடுக்கும் முன்பு அனிதா என்னவெல்லாம் நினைத்தாரோ? அனிதாவின் குடும்பத்துக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com