மாணவி அனிதாவின் மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், ட்விட்டரில் ரஜினி தெரிவித்ததாவது:
மாணவி அனிதாவின் முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அனிதாவின் மரணத்தால் என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது.
விபரீத முடிவை எடுக்கும் முன்பு அனிதா என்னவெல்லாம் நினைத்தாரோ? அனிதாவின் குடும்பத்துக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.