தமிழ்நாடு
அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்: லாரி உரிமையாளர்கள் போராட்ட அறிவிப்பு
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) முதல், அசல் உரிமம் வைத்துக் கொண்டுதான் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை கண்டித்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) முதல், அசல் உரிமம் வைத்துக் கொண்டுதான் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை கண்டித்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வரும் 13-ஆம் தேதி வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
மாதவரத்தை அடுத்த மஞ்சம்பாக்கத்தில் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்துக் கொண்டு தான் வாகங்களை இயக்க வேண்டும்.
இல்லாவிட்டால், ரூ.500 அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டுமே சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.