ஈபிஎஸ், ஓபிஎஸ் செய்யாததை டிடிவி தினகரன் செய்துள்ளதாக எம்எல்ஏ ஏழுமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஏழுமலை,
தமிழகத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிற ஆட்சிக்கு மக்கள் மத்தியில்
மிகப்பெரிய அவப்பெயர் உள்ளது என்று தெரிந்தும், மாணவி அனிதாவின் உடலுக்கு துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செய்யாத காரியத்தை துணைப் பொதுச் செயலாளர் செய்துள்ளார். இதிலிருந்து தினகரனை தமிழக மக்கள் ஏற்றுகொண்டுள்ளது தெரிகிறது என்றார் ஏழுமலை.