சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துவந்த அதிமுக எம்எம்ஏக்கள் 19 பேர், அவருக்கு நாங்கள் அளித்து வந்த ஆதரவை இழந்துள்ளதால் முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து தனித்தனியாக கடிதம் அளித்தனர்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு மீதான பெரும்பான்மை குறித்து வழக்குரைஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உள்கட்சி பிரச்னை என்பதால் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது. கட்சி பிளவுபட்டு மூன்றில் 2 பங்கை இழந்தால் மட்டுமே உத்தரவிட முடியும்.
எனவே, பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக முதல்வர் தரப்பிலான வாதம் வைக்கப்பட்டுள்ளது.