வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், சொத்து குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், சொத்து குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை எதிர்த்து முசிறியை சேர்ந்த தங்கவேலு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
அதில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவரின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது. அதனால் அதை நினைவு இல்லமாக மாற்றுவது தவறான முன் உதாரணமாகி விடும். எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் இந்த வழக்கு விளம்பரத்துக்காக போடப்பட்டுள்ளது என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வேதா நிலையம் சொத்து குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பினர், மேலும் இது தொடர்பாக அரசின் கருத்தை தெரிவிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு (செப்.7) ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com