குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
திற்பரப்பு அருவியில் வெள்ளிக்கிழமை கொட்டிய தண்ணீர்.
திற்பரப்பு அருவியில் வெள்ளிக்கிழமை கொட்டிய தண்ணீர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை நீடித்து வருகிறது. இந்த மழையால் வறண்டு கிடந்த ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. வெள்ளிக்கிழமை திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com