திருப்பதி ஏழுமலையானை நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர், தனது மகன் குரளரசனுடன் விஐபி பிரேக் தரிசனத்தில் வெள்ளிக்கிழமை வழிபட்டார்.
தரிசனம் முடித்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: குரளரசன் நடித்துள்ள 'சரசுடு' என்ற தெலுங்கு படம் வெற்றி அடைய வேண்டும் என்றும், சிலம்பரசனுக்கு நல்ல மனைவி கிடைக்க வேண்டும் என்றும் ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன். நீட் தேர்வுக்காக மத்திய அரசு நீட்டிய இடத்தில் எல்லாம் தமிழக ஆளும் கட்சியினர் கையெழுத்து போட்டுள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு இருந்த மன தைரியம் இவர்களுக்கு இல்லை. அதனால் தான் தற்போது தமிழ்நாட்டில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன என்றார்.