அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே குடும்பத் தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற மகனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள ஆண்டிமடத்தைச் சேர்ந்தவர் பூவராகசாமி மகன் நாகராஜன் (52). இவருக்கு மனைவி சரோஜா, மகள் சந்திரா, மகன்கள் இந்திரன், ரஞ்சித் ஆகியோர் உள்ளனர். நாகராஜன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.
இதேபோல, திங்கள்கிழமை இரவும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த நாகராஜன், மனைவி சரோஜாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவரது மகன் ரஞ்சித் (18) நாகராஜனை அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த நாகராஜன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் விஜயகுமார், ரஞ்சித்தை கைதுசெய்தனர்.