தமிழக அரசு பெரும்பான்மை விவகாரம்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு! 

சட்டப்பேரவையினைக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக அரசு பெரும்பான்மை விவகாரம்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு! 

சென்னை: சட்டப்பேரவையினைக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கையினை இழந்து விட்டதாகக் கூறி டிடிவி தினகரன் தலைமையிலான 19 எம்.எல்.ஏக்கள் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அந்த மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் , ஆளுநர் அமைதி காத்து வருகிறார்.

இந்த நிலையில் சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினும் பிற எதிர்கட்சிகளும் சேர்ந்து ஆளுநரிடம் இதே விவகாரம் தொடர்பாக கடிதம் கொடுத்தனர். ஆனால் இந்த கடிதம் குறித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், நேற்று முன்தினம் ஸ்டாலின் சென்னை உயர் நீதின்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

அதில் அவர் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சட்டப்பேரவையினை உடனடியாகக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ரிட் மனு தாக்கல் செய்தார்.

இன்று அந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது, மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.ராமன் எழுந்து, இதே போன்ற கோரிக்கையினை வலியுறுத்தி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். எனவே இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்குமாறு அவர் கோரிக்கை வைத்தார்.

அதற்கு அவர் தரப்பு வாதங்களை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com