குமுளியில் தேசிய அளவிலான புலிகள் காப்பக கருத்தரங்கு: மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் தொடக்கி வைத்தார்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலய வளாகத்தில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு அரங்கில்
குமுளியில் தேசிய அளவிலான புலிகள் காப்பக கருத்தரங்கு: மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் தொடக்கி வைத்தார்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலய வளாகத்தில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு அரங்கில் வெள்ளிக்கிழமை புலிகள் காப்பக கருத்தரங்கை மத்திய வனத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் தொடக்கி வைத்தார்.

இதில் கேரள மாநில வனத்துறை அமைச்சர் கே.ராஜீ, மற்றும் தேசிய அளவில் உள்ள 50 புலிகள் காப்பக வனக்காப்பளர்கள், இயக்குநர்கள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சனிக்கிழமை (செப். 16) வரை நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தல் மற்றும் வனங்களை பாதுகாத்தல் உள்ளிட்டவை பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக வனத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com