தமிழகத்தில் இனி மழை குறையும்

தென்மேற்கு பருவமழைக் காலம் நிறைவடைய உள்ளதால், தமிழகத்தில் மழைப்பொழிவு குறையத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்மேற்கு பருவமழைக் காலம் நிறைவடைய உள்ளதால், தமிழகத்தில் மழைப்பொழிவு குறையத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியது:
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாத இறுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலும் மழையின் அளவு குறையும். இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழகத்துக்கு அதிக மழைப் பொழிவைத் தரக்கூடிய வடகிழக்கு பருவமழைக்கான காலநிலை கூடி வரும். அந்த சமயம் மீண்டும் தமிழகத்தில் மழை பெய்யும்.
சனிக்கிழமையைப் பொருத்தவரை, வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை நிலவரம் (மி.மீட்டரில்):
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி - 50, அரவக்குறிச்சி, ஊட்டி, நீலகிரி மாவட்டம் தேவாளை, வால்பாறை, ஈரோடு மாவட்டம் தளவாடி - 20, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, தேனி மாவட்டம் பெரியாறு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, ஓகனேக்கல், கோத்தகிரி, வேலூர் மாவட்டம் மேலத்தூர், பேச்சிப்பாறை - 10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com