நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி, திருச்சியில் வரும் 19 -ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, பெருவாரியாக மாநில பாடத் திட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்களை அந்தத் தேர்வில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சியில் வரும் 16 -ஆம் தேதி அதிமுக அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசின் தடைகளைத் தகர்த்தெறிந்து, நீதிமன்ற அனுமதிப்படி, வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.