நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்றப் புறக்கணிப்பில் சீர்காழி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்றப் புறக்கணிப்பில் சீர்காழி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். சனிக்கிழமையும் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர். வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்குரைஞர்கள், பெண் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com