பாம்பன் ஆழ்கடல் பகுதியில் காணப்படும் அரிய வகையான பாலூட்டி இன பால் சுறா மீன், மீனவர் வலையில் சிக்கியது.
பாம்பன் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை மீன் பிடித்த மீனவர்கள் வலையில் இந்த மீன் சிக்கியது. இது 8 அடி நீளம், 300 கிலோ எடை கொண்டதாக இருந்தது. மீனவர்கள் இதனை கரைக்கு கொண்டு வந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். மேலும் வியாபாரிகள் கூடுதலான விலைக்கு ஆர்வத்துடன் வாங்கினர். மன்னார் வளைகுடாக் கடல் பகுதியில் காணப்படும் அரிய வகையான பால் சுறா, டால்பின், புள்ளி திமிங்கலம் உள்ளிட்டவை அடிக்கடி வலைகளில் சிக்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.