அதிமுக அரசை யாராலும் கலைக்க முடியாது என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
கரூரில் வரும் அக்.4-ம் தேதி எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு திருமாநிலையூரில் நடைபெற்ற கால்கோள் விழா, பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகளைத் தொடக்கிவைத்த அவர் மேலும் கூறுகையில், மற்ற மாவட்டங்களை விட கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை, ஜெயலலிதா தந்த ஆட்சியை காக்க நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம். இந்த அரசை யாராலும் கலைக்க முடியாது என்றார்.