அதிமுகவில் ஒரு குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் ஆட்டம் ஆடிய ஒரு குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுகவில் ஒரு குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது: ஓ.பன்னீர்செல்வம்

நாமக்கல்: அதிமுகவில் ஆட்டம் ஆடிய ஒரு குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழக அரசு சார்பில் நாமக்கல் அருகே கருப்பட்டிப்பாளையத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:

அதிமுகவையும் ஆட்சியையும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்காக ஆட்டம் போட்ட ஒரு குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்றவர் மலையோடு மோதினால் அவர்களின் தலைதான் உடையும். ஆட்சியை கவிழ்க்க முயல்பவர்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவித்தார்.

மேலும், ஆட்சியை எப்படியாவது கலைத்துவிடலாம் என எண்ணுகிறார்கள், கனவு காண்கிறார்கள். அதை வைத்து திமுக குறுக்கு வழியில் ஆட்சியைக் பிடிக்க முயற்சி செய்கிறது. அது நடக்காது என்றார்.

சசிகலா குடும்பம் குறித்த 1 சதவீத உண்மையை தான் வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறிய பன்னீர்செல்வம், தினகரன் இதோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால் மேலும் 89 சதவீத உண்மையை அடுத்தடுத்து வெளியிட நேரிடும் என எச்சரித்தார்.

முன்னதாக அமைச்சர் தங்கமணி பேசுகையில், கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்வோம். எத்தனை துரோகிகள் வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று கூறினார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com