அரசை குறை கூறுபவர்கள் காலத்தின் சக்கரத்தில் சிக்கி அழிந்து போவார்கள்: முதல்வர் பழனிசாமி

தமிழக அரசை குறை கூறுபவர்கள் காலத்தின் சக்கரத்தில் சிக்கி அழிந்து போவார்கள் என முதல்வர் பழனிசாமி கூறினார்.
அரசை குறை கூறுபவர்கள் காலத்தின் சக்கரத்தில் சிக்கி அழிந்து போவார்கள்: முதல்வர் பழனிசாமி

நாமக்கல்: தமிழக அரசை குறை கூறுபவர்கள் காலத்தின் சக்கரத்தில் சிக்கி அழிந்து போவார்கள் என முதல்வர் பழனிசாமி கூறினார்.

தமிழக அரசு சார்பில் நாமக்கல் அருகே கருப்பட்டிப்பாளையத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:
அதிமுக என்ற இரும்பு கோட்டையை யாராலும் அசைக்க முடியாது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என செயல்பட்டும் இந்த அரசை குறை கூறுபவர்கள் காலத்தின் சக்கரத்தில் சிக்கி அழிந்து போவார்கள்.

அதிமுக ஆட்சியை கலைத்து விடலாம், இந்த கட்சியை கைப்பற்றி விடலாம் என்று கனவு காண்கின்றார்கள். அவர்கள் காண்பதெல்லாம் பகல் கனவு. அது ஒருக்காலும் முடியாது. இங்கே அமர்ந்திருக்கின்ற தொண்டர்கள் இருக்கும்வரை இந்த இயக்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com