டி.டி.வி. தினகரன் திமுகவுடன் கைகோர்த்துவிட்டார்: அரசு தலைமை கொறடா குற்றச்சாட்டு

டி.டி.வி. தினகரன், திமுகவுடன் கைகோர்த்துவிட்டார் என்றார் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன்.

டி.டி.வி. தினகரன், திமுகவுடன் கைகோர்த்துவிட்டார் என்றார் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன்.
அண்ணாவின் 109 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசியது:
அண்ணா வழியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சிறப்பான ஆட்சி தந்தனர். தற்போது அவர்களது வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நம்பிக்கையான நல்லாட்சி நடைபெற்று வருகிறது.
டி.டி.வி. தினகரன் திமுகவுடன் கைகோர்த்து ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார். ஜெயலலிதாவின் ஆன்மா அவரை ஒருபோதும் மன்னிக்காது. இந்த ஆட்சி தனது ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யும். மீண்டும் தேர்தல் வந்தால் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி வரும் என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com