இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சட்டப்பேரவைத் தலைவரின் முடிவில் தலையிடுவது உரிமை மீறல் ஆகும். தினகரன் சூரிய நமஸ்காரம் செய்பவர். தற்போது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்.
இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஜெயலலிதா அரசு தொடர வேண்டும் என நினைக்கின்றனர். 100 ஆண்டுகள் கட்சி நிலைக்க வேண்டும் என்றார்.
மேலும் பொதுக்குழுவில் தலைமை கழக நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்றுகூடி நடவடிக்கை எடுத்ததாகவும், அதன் தொடர்ச்சியே இந்த தில்லி பயணம் எனவும் குறிப்பிட்டார்.