தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலர் ஜெ.தீபா.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: மாணவி அனிதா இறப்பு, மாணவ சமுதாயத்துக்குப் பேரிழப்பாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது. தமிழக மாணவர்கள் மீது எதையும் திணிக்கக் கூடாது. நாம் யாருக்கும் அடிமையும் இல்லை. நீட் தேர்வு தமிழகத்துக்குத் தேவையில்லை. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்றார் தீபா.
பேட்டியின் போது தீபாவின் கணவர் மாதவன், முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.