முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 95 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புகார் எழுந்தது. இதுதொடர்பாக கணேஷ் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜி 2011-2015 ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.